உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித் துள்ள நிலையில், ஆலை அமைந் துள்ள பகுதியில் போலிசார் தீவிரமாகக் கண்காணித்து வரு கின்றனர். அதே போல் தூத் துக்குடியின் முக்கிய பகுதிகளி லும் போலிசார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலையைச் சுற்றியுள்ள வீர பாண்டியபுரம், குமரெட்டியாபுரம், பண்டாரபுரம் உள்ளிட்ட பகுதி களில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களி டம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, ஸ்டெர் லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்ட ரீதியாக போராடி வருவதாகக் குறிப் பிட்டார். "ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். எனவே சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்றார் சந்தீப்நந்தூரி. இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். "ஸ்டெர்லைட் ஆலை தொடர் பாக முதல்வர் உரையில் ஏதும் குறிப்பிடாதது குறித்து மு.க. ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!