‘காங்கிரசை கவிழ்க்க ரூ.100 கோடி பேரம், பதவி ஆசை’

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்துவிட்டு அங்கு தங்களின் பாஜக ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக ரூ.100 கோடி தருவதாகப் பேரம் பேசியுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங் கூறுகையில், "மபியில் கமல்நாத் அரசைக் கவிழ்ப்பதற்காக ரூ.100 கோடி தருவதாக காங்கிரஸ் எம்எல்ஏக் களை பாஜக விலைக்கு வாங்க முயல்கிறது.

"பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரையும் சந்தித்துப் பேசி உள் ளார். கமல்நாத் அரசைக் கவிழ்க்க ரூ.100 கோடி தருவதாகவும் புதிய பாஜக அரசு அமையும்போது அமைச்சர் பதவி தருவதாகவும் பேரம் பேசி உள்ளார். "2003ஆம் ஆண்டும் காங் கிரஸ் எம்எல்ஏக்கள் பலருக்கும் இதுபோன்ற ஆசை காட்டித்தான் பாஜக ஆட்சியைப் பிடித்தது. பாஜகவின் ஆசை வார்த்தைகளை ஏற்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மறுத்துவிட்டனர். சிவராஜ் சிங் சவுகானால் தனது தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாததால் இவ்வாறு செய்கிறார்," என்றார். ஆனால் திக்விஜய் சிங்கின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக தலைவர் நரோத்தம் மிஸ்ரா கூறியபோது, "திக்விஜய் சிங் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நீண்டகாலமாக கூறி வருகிறார். சுய விளம்பரத்துக்காக அவர் நாடகமாடுகிறார். ஆதாரம் இருந் தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!