சென்னை: சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை முன்னாள் அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படாததை அடுத்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிய வசதி செய்து தரவில்லை எனில் மாநிலத்தில் நீதித்துறை அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டிய தேவை வரும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக கோவில்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. அவற்றை மீட்பதில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் மிகுந்த தீவிரம் காட்டி வந்தார்.
இந்நிலையில் அண்மையில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு பதவி நீட்டிப்பு வழங்கவில்லை. இதை யடுத்து சிலைக்கடத்தல் வழக்கு களை விசாரிக்கும் சிறப்பு அதி காரியாக அவரை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக (ஐஜி) பணியாற்றியபோது என் னென்ன வசதிகள் வழங்கப்பட்ட னவோ, அவை அனைத்தையும் அவருக்கு மீண்டும் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. எனினும் அரசுத் தரப்பில் இருந்து பொன் மாணிக்கவேலுக்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்க வில்லை எனக் கூறப்படுகிறது. Screenshot from YouTube/Thandora