அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசில் ஆடவர் ஒருவர் இந்திய காற்பந்து குழுவின் ஆதர வாளர்களைப் பறவைக் கூண்டில் அடைத்து வைத்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளிவந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப் பட்டிருக்கிறார். கடந்த வியாழக் கிழமை ஐக்கிய அரபுச் சிற்றரசில் நடைபெற்ற ஏஎஃப்சி ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபுச் சிற்றர சிடம் தோற்றுப்போனது. இந்த ஆடவர், கையில் தடியை வைத்துக்கொண்டு கூண்டில் அடைபட்டிருந்த ஊழியர்களை இந்தியாவுக்குப் பதிலாக ஐக்கிய அரபுச் சிற்றரசை ஆதரிக்கக் கோருவது போல் காணொளி காட்டியது. யாரை ஆதரிக்கிறீர்கள் என்று இந்த ஆடவர், ஊழி யர்களைக் கேட்டபோது தாங்கள் இந்தியாவை ஆதரிப்பதாக ஊழியர்கள் பதில் அளித்தனர். இதற்கு அந்த ஆடவர், இது நல்லதல்ல என்றும் ஐக்கிய அரபுச் சிற்றரசில் இவர்கள் வேலை செய்வதால் இவர்கள் ஐக்கிய அரபுச் சிற்றர சுக்குத்தான் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதற்குச் சரி என்று ஊழியர்கள் கூறிய பின்னர் அவர்கள் விடு விக்கப்பட்டனர். இதனை விளையாட்டாகச் செய்ததாக கைதான ஆடவர் கூறியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபுச் சிற்றரசில் இந்தியர்கள் கூண்டில் அடைப்பு
13 Jan 2019 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2019 10:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!