ஐக்கிய அரபுச் சிற்றரசில் இந்தியர்கள் கூண்டில் அடைப்பு

அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசில் ஆடவர் ஒருவர் இந்திய காற்பந்து குழுவின் ஆதர வாளர்களைப் பறவைக் கூண்டில் அடைத்து வைத்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளிவந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப் பட்டிருக்கிறார். கடந்த வியாழக் கிழமை ஐக்கிய அரபுச் சிற்றரசில் நடைபெற்ற ஏஎஃப்சி ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபுச் சிற்றர சிடம் தோற்றுப்போனது. இந்த ஆடவர், கையில் தடியை வைத்துக்கொண்டு கூண்டில் அடைபட்டிருந்த ஊழியர்களை இந்தியாவுக்குப் பதிலாக ஐக்கிய அரபுச் சிற்றரசை ஆதரிக்கக் கோருவது போல் காணொளி காட்டியது. யாரை ஆதரிக்கிறீர்கள் என்று இந்த ஆடவர், ஊழி யர்களைக் கேட்டபோது தாங்கள் இந்தியாவை ஆதரிப்பதாக ஊழியர்கள் பதில் அளித்தனர். இதற்கு அந்த ஆடவர், இது நல்லதல்ல என்றும் ஐக்கிய அரபுச் சிற்றரசில் இவர்கள் வேலை செய்வதால் இவர்கள் ஐக்கிய அரபுச் சிற்றர சுக்குத்தான் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதற்குச் சரி என்று ஊழியர்கள் கூறிய பின்னர் அவர்கள் விடு விக்கப்பட்டனர். இதனை விளையாட்டாகச் செய்ததாக கைதான ஆடவர் கூறியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!