சென்னை: கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை தொடர்பான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்க உள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி முறையிடப்போவ தாக அவர் கூறியுள்ளார்.
கோடநாடு எஸ்டேட்டில் பல மாதங்களுக்கு முன் நடைபெற்ற மர்மக் கொலைகள், சம்பவங்களின் பின்னணி தொடர்பாக டெகல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டுள் ளார். இதனால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழக முதல்வர் மீது நேரடியாக மேத்யூஸ் குற்றம்சாட்டி இருப்பது அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரைச் சந்தித்து முறையிடப்போவதாக வும், இந்தச் சந்திப்புக்காக நேரம் கேட்டிருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.