ஆளுநர்: பயமுறுத்துகிறார் முதல்வர்

ஆளுநர்: பயமுறுத்துகிறார் முதல்வர்

1 mins read

புதுவை: முதல்வர் நாராயணசாமியின் செயல்பாடு குறித்து மத்திய அரசுக்கு விவரம் தெரிவித்துள்ளதாக புதுவை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். தம்மிடம் வரும் அரசுக் கோப்புகள், கடிதங்களில் காணப்படும் குறிப்புகள் மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "நான் எதற்கும் பயப்பட மாட்டேன் என்பது முதல்வர் நாராயணசாமிக்குத் தெரியும். எனவே என்னைப் பயமுறுத்தும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்," என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.