நஞ்சு அருந்திய காதலர்களுக்கு மருத்துவமனையில் திருமணம்

ஹைதராபாத்: குடும்பத்தினர் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் நிறைவேறாது என்று நினைத்த ரேஷ்மா என்ற பெண் தனது காதலை நிரூபிக்க நஞ்சு குடித்தார். அதன்பின்னர் சிசிச்சை அளிக்கப்பட்ட விகாராபாத் அரசு மருத்துவமனைக்கு வந்த ரேஷ்மாவின் காதலன் முகமது நவாஸ், ரேஷ்மா குடித்த மருந்து பாட்டிலைப் பார்த்துவிட்டுத் தருவதாகக் கூறி மருத்துவர் களிடம் வாங்கி மீதமிருந்த மருந்தைக் குடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், ஹைதராபாத் அருகே உள்ள விகாராபாத் நகரைச் சேர்ந்த முகமது நவாஸ், ரேஷ்மாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். காதலர்களின் உடல்நிலை சீரான நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையிலேயே மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சாட்சியாக இஸ்லாமிய முறைப்படி பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!