பெங்களூரு: கர்நாடக முதல்வரின் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதிசெய்து வருவதாகவும் இப்போது அந்த சதிச்செயலை நிறைவேற்ற காங்கிரஸ் எம்எல்ஏக் களைத் தங்களது கட்சியின் பக் கம் வளைத்துப்போட பாஜக குதிரை பேரம் நடத்தி வருவதாக வும் கர்நாடக காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒரு வரும் அமைச்சருமான டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இச்சூழ்நிலையில், கர்நாடகா வில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை விட்டு விலகி, நாளை 16ஆம் தேதி பாஜகவில் சேரப்போவதாக வெளியாகி உள்ள தகவல் கர்நாடக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்களின் இந்த திடீர் முடிவு காரணமாக கர்நாடக முதல் வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜகவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும் தற்போது அதிருப்தியில் உள்ள மூன்று எம்எல்ஏக்கள் மும்பையில் உள்ள னர் என்றும் அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.