ஒடிசா: மோடியின் வருகைக்காக ஏராளமான மரங்கள் அழிப்பு

ஒடிசா: மோடியின் வருகைக்காக ஏராளமான மரங்கள் அழிப்பு

1 mins read

புதுடெல்லி: ஒடிசாவுக்குப் பிரதமர் மோடி வர உள்ள நிலையில், பாலங்கிர் நகரில் ஹெலிபேட் அமைப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அழிக்­கப்பட்டுள்ளன. மத்திய அரசின் செயல்பாடு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி­யையும் வேதனை­யையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்­களுக்கு அடிக்கல் நாட்டு­ கிறார். ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியைப் பாஜக விமர்சித்து வந்த­தால் முதல்வர் நவீன் பட்நாயக் மோடி நிகழ்ச்சி­யில் பங்கேற்­காமல் புறக்கணிப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளி­யாகி­யுள்­ளது. கடந்த 5ஆம் தேதி பிரதமர் மோடி ஒடிசா வந்தபோது நவீன்பட்நாயக் பங்கேற்கவில்லை.