இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னலமற்ற சேவையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிலிப் கோட்லெர் அனைத்துலக விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற பேராசிரியரான பிலிப் கோட்லெர் நினைவாக ஆண்டுதோறும் வர்த்தகத்துறையில் விருது வழங்கப்படுகிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் சிறப்பான சேவையாற்றும் தலைவர்களுக்கு இந்த ஆண்டு முதல் விருது வழங்கத் தீர்மானிக்கப்பட்டு, இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னலமற்ற சேவையாற்றுவதற்காக இவ்விருதுக்குப் பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி, அமெரிக்கவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்த விருது டெல்லியில் பிரதமர் மோடிக்கு நேற்று வழங் கப்பட்டது. விருதையும் பாராட்டுப் பட்டயத்தையும் மோடி பெற்றுக் கொண்டார். "சிறப்பான தலைமைத்துவத்துடன், நாட்டுக்கு மோடி ஆற்றி வரும் தன்னலமற்ற சேவையால் இந்தியப் பொருளியல் வளர்ச்சி அடைந்துள்ளது," என்று விருதுடன் அளிக்கப்பட்ட பாராட்டுப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "உலகப் புகழ்பெற்ற இந்த விருதைப் பெற்றுள்ள நமது பிரதமருக்கு வாழ்த்துக்கள்," என்று பதிவிட்டுள்ளார். மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.