திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப் பனைத் தரிசனம் செய்துவர சென்ற இரு பெண்கள் தரிசனத் திற்கு அனுமதிக்கப்படாமல் வலதுசாரி போராட்டக்காரர்களால் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். தாங்கள் தொடங்கிய ஐயப்பன் தரிசனத்தை முழுமையாக நிறை வேற்ற ஏற்பாடுகள் செய்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பெண்கள், உண் ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முயன்ற கேரள மாநிலத்தின் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகிய இரு பெண்களும் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் நீலமலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இவர்கள் ஆண்களைப் போல வேடமணிந்து சாமி தரி சனம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலிசார் அவர் களைப் பாதுகாப்புடன் பம்பைக்குத் திருப்பி அழைத்துச் சென்றனர். "நாங்கள் 41 நாள் விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து வந்துள் ளோம். ஐயப்பனைத் தரிசனம் செய்யாமல் போகமாட்டோம்," என அவ்விரு பெண்களும் காவல் துறையினரிடம் கூறியதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று அதி காலையில் 'பேஸ்கேம்ப்' பகுதி யைத் தாண்டியதும் பெண்களை முற்றுகையிட்ட ஐயப்ப பக்தர்கள் அவர்களை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்துநிறுத்தினர். "ஐயப்பன் கோயிலில்தான் இருக்கிறார். அவர் பெண்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. இவர்கள் யார் எங்களைத் தடுப்பதற்கு?" என்று வழிமறிக்கப் பட்ட ஒரு பெண் கேள்வி எழுப் பியதாகவும் கூறப்படுகிறது.