பதவி, பண ஆசை காட்டி எம்எல்ஏக்களை இழுப்பதாகக் கூறி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

குருகிராம்: கர்நாடகத்தில் உள்ள எம்எல்ஏக்களை கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்தும் பதவி ஆசையைக் காட்டியும் இழுப்பதற்கு குதிரை பேரம் நடப்பதாகக் கூறி பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக் கும் ஹோட்டல் அருகே திரண்ட காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை விட்டு விலகி பாஜகவில் சேரப் போவதாகவும் இதற்காக குதிரை பேரம் நடப்பதாகவும் சில தினங் களுக்கு முன் தகவல் வெளி யானது.

அதேசமயம் பாஜக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை இழுக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் திட்ட மிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் நடை பெற உள்ள நாடாளுமன்றத் தேர் தல் குறித்து ஆலோசனை நடத்து வதற்காகவும் கர்நாடகப் பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் டெல்லி யில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லி அருகே உள்ள குருகிராமத்தில் பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே காங் கிரஸ் தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மும்பை ஹோட் டலில் தங்கியிருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் விரைவில் அவர்கள் கர்நாடகத்திற்குத் திரும்புவார்கள் என்றும் முதல்வர் குமாரசாமி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!