சைக்கிளோட்டிகளும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரும் பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து நடைபாதைகளில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்ட அனுமதிக்கப்பட மாட்டாது. நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று இதனைத் தெரிவித்தது. மேலும், அவர்கள் சாலையைக் கடக்கும்போது தங்களது சாதனங்களை நிறுத்தி, வாகனங்கள் வருகின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அதே போல பாதசாரிகள் கடப்பதற்கான வரிக்கோட்டுப் பாதை யை நெருங்கும்போது வாகன ஓட்டிகளும் மெதுவாகச் செல்ல வேண்டும்.
அத்துடன், சாலைகளில் சைக்கிளை ஓட்டும் அனைத்து சைக்கி ளோட்டிகளும் தலைக்கவசத்தை அணிய வேண்டும். இதற்கிடையே, இயந்திர வசதி உடைய சக்கர நாற்காலிகளுக்கும் ஸ்கூட்டர்களுக்கும் அதிகபட்சமாக மணிக்கு 10 கிலோமீட்டர் வேகக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். "நமது நடைபாதைகளையும் சாலைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளில் ஒரு பகுதி யாக இந்த விதிமுறைகள் இடம்பெறுகின்றன," என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப் பிட்டது. உந்து நடமாட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட பின் அரசாங்கம் இந்த விதிமுறைகளைக் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக அறிவித்திருந்தது.

