நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசாங்கத்தின் செயல் திறன் மிகவும் மோசமாக இருக் கிறது என்றும் இதன் காரணமாக மாநிலத்தில் நீர்நிலைகளில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதாகவும் இந்தியா வின் தலைமை கணக்குத் தணிக் கையாளர் அலுவலகம், அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாடு நீர்நிலைகள் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுச் சட்டம் 2007ன்படி, மாநிலத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் கணக்கெடுத்து அவற்றின் எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒன்று.
ஆனால் மாநிலத்தில் ஆட்சேபணைக்கு இலக்காகக்கூடிய மொத்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு களில் 49% நீர்நிலைகளில் இடம் பெற்று இருக்கின்றன. அத்தகைய ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏற்படக்கூடிய மிரட்டல்கள் அதிகமாகிவிட்டன. ஆகையால் நீர்நிலை ஆக்கிர மிப்புகளைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்க மாநில அரசாங்கம் தடை விதித்தது. இருந்தாலும் 2007 சட்டத்திற்குப் பிறகு 10 ஆண்டு காலத்தில் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு நடத்தி அவற்றின் எல்லைகளைப் பாதுகாப்பதில் மாநில அரசாங்கம் மிகவும் மோசமாக நடந்து கொண்டு இருக்கிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த 2007ஆம் ஆண்டு சட்டத்தில் நீர்நிலைகளைப் பாதுகாத்து சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து அவற்றைத் தடுக்க உதவும் பல அம்சங்கள் இருக்கின்றன.
ஆனால் மாநிலத்தின் நீர்வளத்துறை, நீர்நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்தால்தான் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளைத் தடுக்க முடியும். ஏற்கெனவே நீர்நிலைகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பவர்களை வெளியேற்ற முடியும் என்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது.