மும்பை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து இருந்ததாகக் கூறப்படும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 'ஏடிஎஸ்' எனும் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை கடந்த இரு தினங்களாக சந்தேக நபர்களைத் தேடி வேட்டையாடியது.
இதன் இறுதியில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த சில வாரங்களாகவே ஒன்பது பேரையும் 'ஏடிஎஸ்' படையினர் கண்காணித்து வந்தனர்.
பின்னர் தங்கள் சதித் திட்டத்தை செயல்படுத்த தயாரான போது அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கவுசா, மோடி பக், அல்மாஸ் காலனி, ம்ருத் நகர் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.
ரசாயனங்கள், அமில போத்தல்கள், கூர்மையான ஆயுதங்கள், கைத்தொலைபேசி, 'சிம்' அட்டைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ்ஸுடன் தொடர்பு; ஒன்பது பேர் கைது
24 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 08:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!