புதுடெல்லி: முன்னாள் அதிபர் பிர விதித்தது குறிப்பிடத்தக்கது. ணாப் முகர்ஜி, அசாமைச் சேர்ந்த கலைஞரான மறைந்த பூபன் ஹசா ரிகா, சமூக சேவகராகத் திகழ்ந்து மறைந்த நானாஜி தேஷ்முக் ஆகி யேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன. டீஜன்பாய், இஸ்மாயில் ஓமர், அனில்பாய், பல்வந்த் மேரேஷ்வர் ஆகிய 4 பேர்களுக்கு பத்ம விபூ ஷண் விருதுகளும் பிரபல நடிகர் மேகன்லால், விஞ்ஞானி நம்பி நாராயணன், குல்தீப் நய்யார் ஆகி யோருக்கு பத்ம பூஷண் விருது களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ விருதுக்காகத் தேர்ந் தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட வர்களில் ஒருவரான ஒடிசா முதல் வர் நவின் பட்நாயக்கின் சகோதரி யும் பிரபல எழுத்தாளரும் இயக்கு நருமான கீதா மேத்தா தமக்கு அந்த விருது தேவை இல்லை என்று கூறியுள்ளார்.
கீதா மேத்தா தற்போது அமெ ரிக்காவைச் சேர்ந்த புத்தகப் பதிப் பாளர் சோனி மேத்தாவை மணம் புரிந்து அங்கேயே வாழ்ந்து வரு கிறார். அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சி சிறப்புச் செய்தி யாளராகவும் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், பத்மஸ்ரீ விருது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் நான் இந்த விருதை கண்டிப்பாக ஏற்க இயலாது. அதற்காக வருந்துகிறேன். விருதை நான் ஏற்றால், பல்வேறு தவறான யூகங்களுக்கு வழிவகுத்துவிடும்," என கூறியுள்ளார்.