மத்திய பிரதேசம்: சாலை விபத்தில் உறவினர்கள் 12 பேர் பலி

உஜ்ஜையினி: மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 குழந்தைகள் 5 பெண்கள் உட்பட
12 பேர் உயிரிழந்தனர்.
உஜ்ஜைனி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர்
13 பேர் நக்டா என்ற இடத்தில் நடந்த திருமண நிகழ்ச் சிக்குச் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ராம்கர் பன்ட்டா என்ற இடத்தில் இவர்களின் வேன், எதிரே வந்துகொண்டிருந்த காருடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் வேன் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு, முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயம் அடைந்தார். இவர் அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காரில் வந்தவர்கள் அதிலிருந்த 'ஏர்பேக்' காரணமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.2019-01-31 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!