புதுடெல்லி: கடந்த 45 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் உயர்வு கண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2017-18 நிதியாண்டில் இந்தி யாவின் வேலையின்மை விகிதம் 6.1 விழுக்காடாக அதிகரித்தது என்று தேசிய மாதிரிக் கணக் கெடுப்பு அலுவலகத்தின் மதிப் பீட்டு முடிவுகள் தெரிவிப்பதாக 'பிஸ்னஸ் ஸ்டேண்டர்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரை இந்த மதிப்பீட்டாய்வு நடத்தப்பட்டது.
வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த இந்தத் தரவுகளை வெளி யிட அரசாங்கம் தாமதித்ததே தேசிய புள்ளியியல் ஆணையத்தின் இடைக்காலத் தலைவர் பி.சி. மோகனனும் உறுப்பினர் ஜே.வி. மீனாட்சியும் அண்மையில் தங்க ளது பதவிகளைத் துறக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரம் கடந்த டிசம்பர் மாதத்திலேயே வெளியிடப் பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் அதை வெளியிடவிடா மல் சில அரசாங்க அமைப்புகள் தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
வேலையின்மை விகிதம் நகர்ப் புறங்களில் 7.8 விழுக்காடாகவும் கிராமப்புறங்களில் 5.3 விழுக்காடா கவும் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
2016 நவம்பர் மாதம் அறிவிக் கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவ டிக்கைக்குப் பிறகு வெளியான முதல் வேலைவாய்ப்பு அறிக்கை என்பதால் இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியப் பொருளியல் ஆண்டு தோறும் 7% வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனாலும், ஒவ்வோர் ஆண்டும் மில்லியன்கணக்கான இளையர்கள் வேலைச் சந்தையில் நுழையும் நிலையில் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, 'இந்தியப் பொரு ளியல் கண்காணிப்பு மையம்' எனும் தன்னிச்சையான ஆய்வுக் குழு கடந்த ஆண்டில் இந்தியா 1.1 கோடி மில்லியன் வேலை வாய்ப்புகளை இழந்ததாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையிலும் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையிலும் வெளியாகியுள்ள இந்தத் தகவல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்குத் தேர்தலில் பின்ன டைவை ஏற்படுத்தக்கூடும்.
5 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த வேலைவாய்ப்பின்மை
1 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2019 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!