அவையை புறக்கணித்த தம்பிதுரையால் சலசலப்பு 

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் நேற்று முன்தினம் இடைக்கால நிதிநிலை அறிக் கையைத் தாக்கல் செய்தபோது மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை (படம்) அறையில் இல் லாதது அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிதிநிலை அறிக்கை மீதான உரையை புறக்கணித்ததன் மூலம், பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை மறைமுகமாக அவர் பதிவு செய்தி ருப்பதாகக் கருதப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்மைக்காலமாக மத்திய அரசை அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகிறார் தம்பிதுரை.
குறிப்பாக உயர்சாதியினருக் கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால நிதிநிலை அறிக் கையைத் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால் அதிமுக மூத்த தலை வர்களில் ஒருவரான தம்பிதுரை, அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது அவைக்கு வராமல் புறக் கணித்துள்ளார். ஏற்கெனவே அதிமுகவைச் சேர்ந்த இவரும், சில முக்கிய தலைவர்களும் பாஜக உடனான கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக அண்மையில் தகவல் வெளியானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!