மேற்கு வங்காளத்தில் இந்திய மத்திய அரசு நேரடி நடவடிக்கை?

இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையும் கோல்கத்தா போலிஸ் படையும் சம்பந்தப்படும் அண்மை நிகழ்வுகள் வருத்தத்தைத் தரக்கூடியவை என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

சீட்டு நிதி மோசடி தொடர்பில் கோல்கத்தா போலிஸ் தலைவர் ராஜீவ் குமாரை விசாரிக்கச் சென்றிருந்த மத்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தடுக்கப்பட்டது இதுவரை நடந்திராதது என்று திரு சிங், இந்திய நாடாளுமன்றத்தில் இன்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்காளத்தில் அரசியல் கட்சிகள் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மத்திய புலனாய்வுத் துறையைப் பயன்படுத்தி தமக்கு தொல்லை கொடுப்பதாகக் குற்றம் சாட்டும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்காக இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

மேற்கு வங்காள நிலவரம் குறித்து மாநில ஆளுநரிடம் அறிக்கை ஒன்றைக் கேட்டிருப்பதாக திரு சிங் தெரிவித்தார். சட்டத்துறை அமைப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு ஏற்ற சூழலை மேற்கு வங்காளமும் இதர மாநிலங்களும் ஏற்படுத்தித் தர திரு சிங் நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!