காந்தியின் உருவ பொம்மையைச் சுட்ட சம்பவம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி நினைவு நாளான கடந்த ஜனவரி 30ஆம் தேதி அகில பாரத இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த சிலர், காந்தி­யின் உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரித்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு முழு­வதும் ஆர்ப்பாட்டம் நடை­பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் காந்தியின் உருவப் பொம்மை தீயிட்டு எரிக்கப்படும் காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்­களில் பரவி பெரும் பர­பரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதில், மகாசபா அமைப்பினர் சிலர் கோட்சேவுக்கு ஆதர­வாக கோஷங்கள் எழுப்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து இதில் தொடர்பு உடைய சிலர் கைது செய்யப்பட்ட­ தோடு 13 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
காந்தியின் உருவ பொம்மையை எரித்த செயலுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட பல்வேறு கட்சிகளும் பல அமைப்பு­களும் கடும் கண்டனம் தெரி­வித்து வருகின்றன.
இந்து மகாசபா அமைப்பின­ ­ருக்கு எதிராக போராட்ட அறிவிப்­ பையும் காங்கிரஸ் வெளியிட்டு இருந்தது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணு­கோபால் கூறுகையில், "இந்து மகாசபா அமைப்பைக் கண்டித்து மாநிலத் தலைநகரங்­களில் உள்ள காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடை­பெறும்," என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!