மகாத்மா காந்தி நினைவு நாளான கடந்த ஜனவரி 30ஆம் தேதி அகில பாரத இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த சிலர், காந்தியின் உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரித்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் காந்தியின் உருவப் பொம்மை தீயிட்டு எரிக்கப்படும் காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதில், மகாசபா அமைப்பினர் சிலர் கோட்சேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து இதில் தொடர்பு உடைய சிலர் கைது செய்யப்பட்ட தோடு 13 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
காந்தியின் உருவ பொம்மையை எரித்த செயலுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட பல்வேறு கட்சிகளும் பல அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்து மகாசபா அமைப்பின ருக்கு எதிராக போராட்ட அறிவிப் பையும் காங்கிரஸ் வெளியிட்டு இருந்தது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "இந்து மகாசபா அமைப்பைக் கண்டித்து மாநிலத் தலைநகரங்களில் உள்ள காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெறும்," என்று தெரிவித்தார்.
காந்தியின் உருவ பொம்மையைச் சுட்ட சம்பவம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
4 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!