கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு முன்னிலை

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று டெல்லி அமலாக்கத்துறை அலு வலகம் முன்பு முன்னிலையானார்.
திரு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறு வனத்துக்கு அந்நிய முத லீட்டுக்கு அனுமதி வழங்கப் பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்கு வதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல் வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும் இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை யினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசார ணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று முன்னிலை யானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இதில் தொடர் புடைய இந்திராணி என்பவர் அரசாங்கத் தரப்பு சாட்சியாளராக மாற விருப்பம் தெரிவித்துள்ளதால் கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!