57 போலி மருத்துவர்கள்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநி லத்தில் மருத்துவச் சங்கத்தில் தங்களைப் பதிந்துகொள்வதற்காக 57 பேர் போலியான முதுநிலை பட்டப்படிப்புச் சான்றிதழ்களைத் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
அந்தப் பட்டப்படிப்புச் சான்றி தழ்கள் ஒரே மருத்துவக் கல்லூரி யில் இருந்து பெறப்பட்டு இருக் கின்றன. போலி மருத்துவர்கள் 57 பேரும் ஒரே காலத்தில் படித்த வர்களாகவும் உள்ளனர்.
அதிர்ச்சி அளிக்கும் இந்தச் சம்பவம் அம்பலமானதை அடுத்து போலி மருத்துவர்களின் உரிமங் களை மகாராஷ்டிரா மருத்துவ மன்றம் ரத்து செய்துவிட்டது. அவர்கள் மீது சென்ற ஆண்டில் புகார் பதியப்பட்டது. அவர்கள் நான்கு ஆண்டு காலம் மருத்து வர்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். போலி மருத்து வர்கள் அனைவருமே மும்பையில் இருக்கும் சிபிஎஸ் என்ற மருத்து வக் கல்லூரியிலிருந்து பட்டங் களைப் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் 2014-2015ல் அங்கு படித்து அந்தப் பட்டத்தைப் பெற்ற தாகச் சான்றிதழ் தெரிவிக்கிறது.
இதனிடையே, சிபிஎஸ் கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டு இருக்கிறார் என்றும் அவர் மாணவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு அதற்குப் பதி லாக போலி பட்டப்படிப்புச் சான் றிதழ்களை விநியோகித்து இருக் கிறார் என்றும் போலிஸ் கூறியது.
கைதாகி இருப்பவர் டாக்டர் ஸ்நேகல் நியாத்தி என்பவர். இவர் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை பெற்றுக்கொண்டு போலி சான்றிதழை வழங்கி இருக்கிறார்.
அத்தகைய போலி சான்றிதழ் களைப் பெற்றவர்களில் பலர் மகா ராஷ்டிரா மருத்துவ மன்றத்தில் பதிந்துகொண்டு தொழில் நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!