இந்தியாவின் புதுடெல்லி நகரில் ஹோட்டல் ஒன்று தீப்பிடித்ததை அடுத்து குறைந்தது 17 பேர் மாண்டதுடன் மேலும் மூவர் காயமடைந்திருப்பதாக அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஆர்பிட் பேலஸ்' ஹோட்டலில் இந்தத் தீச்சம்பவம் நடந்தது. இன்று அதிகாலை 4 மணி வாக்கில் மூண்ட தீக்கு மின்சாரக் கோளாறு காரணம் என நம்பப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் ஒரு பிள்ளையும் அடங்குவர் என்று டெல்லியின் தீயணைப்புத் துறை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.