காற்று மாசு: டெல்லியை மிஞ்சிய மூன்று நகரங்கள்

காற்று மாசு: டெல்லியை மிஞ்சிய மூன்று நகரங்கள்

1 mins read

கடந்த ஆண்டு அக்டோபர், மற்றும் நவம்பரில் நடத்தப்பட்ட ஆய்வில், மேற்கண்ட முடிவுகள் தெரிய வந்துள்ளன. சீனாவை விட இந்தியா 50 சதவீதம் அதிகம் காற்று மாசு கொண்ட நாடாக உள்ளது. மேற்கூறிய மூன்று நகரங்களிலும் காற்றில் மாசு அளவு 2.5 பிஎம் என்ற அளவில் இருந்துள்ளது. இந்த அளவானது, தீவிர சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் கொண்டவை ஆகும். பாட்னா நகரம் அதிக காற்று மாசு கொண்ட நகரம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் துணை முதல் மந்திரி சு‌ஷில் குமார் மோடி, "புள்ளிவிவரங்களை நாங்கள் பார்த்தோம். பாட்னா நகரம் முதல் இடம்பெற்றிருப்பது எங்களுக்கு கவலை அளிக்கிறது. சில செயல்திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். அதை செயல்படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம்," என்றார்.