ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து முதல்வர் நாராயணசாமி இரண்டாம் நாளாகப் போராட்டம் 

புதுச்சேரி: மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்திய முதல்வர் நாராயணசாமியும் அவரது தொண்டர்களும் தெரு விலேயே உண்டு, உறங்கியது ஊடகங்களில் தலைப்புச் செய்தி களாக வெளிவந்தன.
ஆளுநர் கிரண்பேடியின் ராஜ் நிவாஸ் மாளிகையை முற்றுகை யிட்டு முதல்வர் நாராயணசாமி தொண்டர்களுடன் நேற்று 2வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கிரண்பேடி திடீர் பயணமாக டெல்லி புறப் பட்டுச் சென்றார்.
பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றவேண்டும் என வலி யுறுத்தி உள்ள நாராயணசாமி, எங்கள் கோரிக்கைகள் நிறை வேறும்வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அரசின் கோப்புகளில் கையொப்பமிடும் பணியையும் அவர் மேற்கொண்டார்.
நேற்று காலை ராஜ் நிவாஸ் மாளிகைக்கு அதிவிரைவுப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஒருபுறம் முதல்வர் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க, மறுபுறம் ஆளுநர் கிரண்பேடி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
புதுச்சேரி மாநில ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும் முதல்வர் நாரா யணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும். ஆனால் கிரண்பேடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று நாராயணசாமி குற்றஞ் சாட்டி வந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!