ரயிலில் கொண்டு செல்லப்பட்ட கல்லீரல்: 38 நிமிடங்களில் பொருத்தப்பட்டது

மும்பை: மும்பையைச் சேர்ந்த 53 வயது சுகாதார உதவியாளர் ஒருவர் கடந்த புதன்கிழமை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று முன்தினம் மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி முன்வந்தார்.
இதையடுத்து சுகாதார உதவியாளர் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டன. இதில் கல்லீரல் பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது.
அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவருக்கு உடனடியாக கல்லீரல் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் சாலையில் சென்றால் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
இதையடுத்து, கல்லீரல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு மின்சார ரயிலில் பரேலில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 38 நிமிடப் பயணத்துக்குப் பிறகு அந்தக் கல்லீரல் நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. முதல்முறையாக உடல் மாற்று சிகிச்சைக்காக ரயிலில் உடல் உறுப்பு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவே சாலையில் கொண்டு சென்று இருந்தால் 2 மணி நேரமாகி இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!