ராபர்ட் வத்ரா நிறுவனத்தின் ரூ.4.62  கோடி சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் நகரில் சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வத்ராவுக்குச் சொந்தமான 'ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி' நிறுவனம் கடந்த 2015-ஆம் ஆண்டில் மிகவும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் நடைபெற்றுள்ள பண மோசடி தொடர்பாக இந்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள பொருளாதார அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வத்ராவிடமும் அவரது தாயார் மவ்ரீனிடமும் அண்மையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக 'ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி' நிறுவனத்துக்கு சொந்தமான 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அண்மையில் அரசியலில் களமிறங்கிய பிரியங்கா காந்திக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!