திருவனந்தபுரம்: கேரளாவில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக பாதிரியார் ஒருவருக்கு 60 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கண்ணூரில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியாரான 51 வயது ராபின் வடக்கும்சேரி 2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் 16 வயது சிறுமி யைக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
சில மாதங்களில் சிறுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத் தார். பின்னர் போலிசாருக்கு அந்தச் சிறுமி கடிதம் ஒன்றை எழுதி தனது நிலையை விளக்கி உள்ளார். சம்பந்தப்பட்ட பாதிரி யாரை போலிசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக பாதிரியார்கள் ஐவர் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது புகார் செய்யப்பட்ட நிலையில் சில பாதிரியார்களும் கன்னியாஸ் திரிகளும் தாமாக முன்வந்து கண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் தலச்சேரி 'போஸ்கோ' நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த இந்த வழக்கில் ராபின் வடக்கும்சேரிக்கு 60 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப் பளித்தார்.
பாலியல் பலாத்காரக் குற்றச் சாட்டுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் உட்பட மொத்தம் 60 ஆண்டுகள் சிறைத் தண் டனை விதிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிரியாருக்கு 60 ஆண்டு சிறை
17 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 11:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!