டுவிட்டரில் காக்கை படங்களை வெளியிட்ட கிரண் பேடி

புதுச்சேரி: புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மீண்டும் டுவிட்டரில் காக்கை படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பி யுள்ளார்.
கடந்த வாரமும் கிரண்பேடி டுவிட்டரில் காக்கை படங்களை பதிவிட்டார்.
அப்போது சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில் மீண்டும் காக்கை படங்களை அவர் வெளியிட்டுள் ளார்.
இந்த காக்கை படங்கள், கடந்த சில நாட்களாக கறுப்பு உடை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை முதல்வர் நாராயணசாமியைக் குறிப்பது போல இருப்பதாக அரசியல் வட் டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

மக்கள் நலத் திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி தரவில்லை என்று கூறி கடந்த ஆறு நாட்களாக ஆளுநர் மாளிகை முன்பு கறுப்பு சட்டை அணிந்து முதல்வர் நாராய ணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது முதல்முறையாக காக்கை படத்தை டுவிட்டரில் பதி விட்ட கிரண் பேடி, 'காக்கை யோகா, தர்ணா போராட்டம் யோகா ஆகுமா' என்று குறிப் பிட்டிருந்தார்.
இதனால் நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் கிரண்பேடி காக்கை படங்களைப் பதிவிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் நேற்று மீண்டும் அவர் காக்கை படங்களை வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாராயணசாமி தரப்பினர் கொதிப்படைந்துள் ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!