மேற்கு வங்கத்தில் திரிணாமூல்  காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக் கொலை

கோல்கத்தா: மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தாரியா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் நஸ்கார். திரிணாமூல் காங்கிரஸ கட்சியின் முக்கிய பிரமுகரான இவர், தாரியா பஞ்சாயத்துத் தலைவி சுவப்னா நஸ்கரின் கணவர் ஆவார். கார்த்திக் நேற்று முன்தினம் இரவு தங்கரகாளி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தாரியாஜாரி எனும் இடத்தில் சென்றபோது பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அவரை வழிமறித்துக் கண்மூடித்தனமாக தாக்கியது. தாக்குதல்காரர்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமுற்று உயிருக்குப் போராடிய கார்த்திக், அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
இதேபோல் நேற்று முன்தினம் மாலை குல்தாலி பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர் சூரத் அலி மோண்டலை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!