300 பயங்கரவாதி கொல்லப்பட்டது உண்மையா?: மம்தா

கோல்கத்தா: கடந்த வாரம் இந்திய விமானப் படை பயங்கர வாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. குறிப்பாக 4 பயங்கரவாத முகாம் கள் அழிந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டி ருக்கலாம் என்றும் அறிவிப்பு கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று முன் தினம் கோல்கத்தாவில் செய்தி யாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "300 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டதாக ஊடகங்களில் வெளி யான தகவல் உண்மையா இல் லையா? ஏனென்றால் அனைத் துலக ஊடகங்களில் உயிரிழப்பு கள் எதுவும் இல்லை என செய்திகள் வந்துகொண்டிருக் கின்றன.
"எனவே எது உண்மை என் பதை தெளிவுபடுத்த வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இந்திய விமா னங்கள் பாகிஸ்தானின் பால கோட்டில் ஜெய்ஷ்=இ=முகம்மது முகாம்கள் மீது நடத்தியதாகக் கூறப்பட்ட தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று துணைத் தளபதி ஆர்.ஜி.கே. கபூரிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அவர், "விரும்பிய இலக்குகள் தாக்கப் பட்டன. ஆனால், இச்சம்பவத் தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!