இதற்கிடையே, 'ஜமாத்=இ=இஸ் லாமி' அமைப்பு சட்டவிரோதமா னது என மத்திய அரசு அறி வித்துள்ளதால் காஷ்மீரில் பதற் றம் உருவாகும் சூழலைக் கருத் தில் கொண்டு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக ஸ்ரீநகரின் சில பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகரின் பழைய நகரப் பகுதி களில் உடனடியாக கட்டுப்பாடு கள் அமலுக்கு வந்ததையடுத்து பிரிவினைவாதத் தலைவர் மிர் வாய்ஸ் உமர் ஃபாரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரத்திலும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை கார ணமாக கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டன. வன்முறையைத் தூண் டும் பதிவுகளையும் படங்களையும் பரிமாற்றம் செய்துகொள்வதைத் தடுப்பதற்காக காஷ்மீர் பள்ளத் தாக்கில் கைபேசி, இணையச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட் டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
ஸ்ரீநகரில் கைபேசி, இணையச் சேவைகள் நிறுத்தம்
1 mins read

