ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தற் கொலைத் தாக்குதலை நடத்தி 40 பேரின் உயிரைப் பறித்த பயங்கர வாதிக்கு ஒரு மின்சாரத் தொழில் நுட்பர் உதவியுள்ளது அதிகாரி களின் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக பாதுகாப் புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மின்சாரத் தொழில் நுட் பரும் ஒரு பயங்கரவாதிதான் என் றும் இவரே புல்வாமா தாக்கு தலுக்குத் தேவையான வாகனம், வெடிபொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மாதம் 14ஆம் தேதி துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் 40 வீரர்கள் உயிரிழந் தனர்.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ் தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது.
இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வுப்பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. குறிப்பாக இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப் பவர்கள், அதற்கு உதவி செய்த வர்கள் என அனைவரின் விவரங் களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தாக்கு தலுக்கு உதவி செய்த பயங்கர வாதியை அதிகாரிகள் அடையா ளம் கண்டுகொண்டுள்ளனர்.
அதன்படி புல்வாமா மாவட்டத் தின் மிர் மொகல்லா பகுதியைச் சேர்ந்த முதாசிர் அகமது கான் என்கிற முகமது பாய், 23, என்ற மின்சாரத் தொழில்நுட்பரே இந்தத் தாக்குதலுக்குத் தேவையான உதவிகளைச் செய்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
பயங்கரவாதிகளின் பட்டியலில் அதிக பிரபலம் இல்லாத இவர் பட்டப்படிப்பை முடித்து ஐடிஐயில் மின்சாரத் துறையில் பயிற்சியையும் முடித்துள்ளார்.
இதற்காக தாக்குதலை நடத்தி 40 பேரைக் கொன்ற பயங்கரவாதி அடில் அகமது தார், தொடர்ந்து இவருடன் தொடர்பில் இருந்துள்ள தும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பயங்கரவாதி முதாசிர் அகமது கான் கடந்த 2017ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் இணைந்திருக்கிறார்.