இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சென்றுகொண்டிருந்த ரயிலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பின் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை இந்திய சிறப்பு நீதிமன்றம் ஒன்று அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துள்ளது.
2007ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.
சுவாமி அசீமானந்த், லோகேஷ் ஷர்மா, கமல் சௌஹன், ராஜிந்தர் செளதரி ஆகிய அந்த நால்வரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்கறிஞர் ராஜன் மல்ஹோத்தரா தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இல்லை என்று அவர்களது வழக்கறிஞர்கள் வாதிட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.