ஓயாமல் அழுத குழந்தையின் வாயை பசையால் ஒட்டிய தாய்

பாட்னா: தனது குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் அதன் வாயை மூடு வதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அதன் உதடுகளில் பசையைப்போட்டு வாயைத் திறக்க விடாமல் ஒட்டிவிட்டுள்ளார் தாய் ஒருவர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த தாய்க்கு எதிராக இவர் எல்லாம் ஒரு தாயா? என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
தங்களின் குழந்தை அழுதால் சில தாய்மார்கள் கோபத்தில் வாயில் 'பிளாஸ்த்ரி' வைத்து ஒட்டிவிடுவேன் என குழந்தை களை மிரட்டி பயமுறுத்துவார்கள். ஆனால், பீகார் மாநிலத்தின் சாப்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது குழந்தையின் அழுகையை நிறுத்த உதட்டின் மீது பசையை ஊற்றி ஒட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் குழந்தையின் தந்தை கூறியபோது, "வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகனின் வாயில் இருந்து நுரை வடிந் திருந்தது. இதுகுறித்து மனைவி யிடம் கேட்டதற்கு, தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் அதை சமாளிக்கமுடியாமல் பசையைப் போட்டு அவன் உதடுகளை ஒட் டியதாகக் கூறினார்," என்றார்.
இதையடுத்து குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!