நாசா: இந்தியாவின் சோதனையால் விண்வெளி நிலையத்திற்கு ஆபத்து

வா‌ஷிங்டன்: இந்தியா மேற் கொண்ட செயற்கைக்கோளைத் தாக்கும் ஏவுகணை சோதனையால் அனைத்துலக விண்வெளி மையத் திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக நாசா அச்சம் தெரிவித்துள்ளது.
'மிஷன் சக்தி' என்ற இந்தச் சோதனையின் மூலம் விண்ணில் 400 குப்பைத் துண்டுகள் உருவாக் கப்பட்டுள்ளதாகவும் அது விண் வெளி நிலையத்துக்கும் அங்கு இருக்கும் விண்வெளி வீரர்களுக் கும் நல்லதல்ல என்றும் நாசா அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரடென்ஸ்டைன், 'செயற்கைக்கோளை அழிப்பதற் காக இந்தியா நடத்திய சோதனை மிகவும் மோசமானது. இதனால், தற்போது பூமியின் மேற்பரப்பில் 400 குப்பைத் துண்டுகள் மிதக் கின்றன.
"10 செ.மீ. அதிகமான அளவு கொண்ட துண்டுகளை மட்டும் தான் தற்போது நாம் கண்டுபிடித்து வருகிறோம். அப்படி 60 துண்டுகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
"24 துண்டுகள் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு ஆபத் தாகும் வகையில் விண்ணில் மிதந்து வருகின்றன.
"இதனால் எதிர்காலத்தில் விண்ணில் மனிதர்களை அனுப்பு வது ஆபத்தானதாக மாறும். இதைப் போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது," என்று காட்டமாக பேசியுள்ளார்.
விண்வெளியில் இதுவரை 23 ஆயிரம் குப்பை துண்டுகள் 10 செ.மீ அளவில் மிதந்து கொண்டு இருப்பதாக அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
அதில் 10 ஆயிரம் துண்டுகள் செயற்கைக்கோளின் துண்டுகளா கும்.
இவற்றில் 3 ஆயிரம் துண்டுகள் மட்டும் கடந்த 2007ஆம் ஆண்டு சீனா நடத்திய செயற்கைக்கோள் எதிர்ப்பு சோதனையின்போது உருவானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!