13,000 கோடி கடனில் தவிக்கும் பிஎஸ்என்எல்; 54,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவ னம் 54,000 பணியாளர்களை நீக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், நிறுவனத்தை மூடும் வகையில் நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருவதாகக் கூறப்படு கிறது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 7,993 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது. மேலும், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த நிலையில், இப்போது 54,000 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க பிஎஸ் என்எல் அனுமதி அளித்துள்ளது. மேலும், ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கவும் முடிவு செய்துள் ளது. இது தொடர்பாக 10 முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிஎஸ்என்எல் ஒப்புதல் வழங்கியுள் ளது. அதில், பணியாளர்கள் நீக் கத்தையும், விருப்ப ஓய்வுபெறும் வயது 50 ஆக குறைக்கப்படு வதையும் முக்கியமானதாகக் கரு தப்படுகிறது. பிஎஸ்என்எல்லின் நடவடிக்கையால், அங்கு பணி யாற்றும் 30 விழுக்காட்டினர் வேலையை இழக்க வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே, கடந்த 12 ஆண்டு களாக பிஎஸ்என்எல், ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு செய்யா மல் இழுத்தடித்து வருகிறது. இதே போல், தினக்கூலி அடிப்படையில் வேலை பார்ப்பவர்களுக்கும் சம் பளம் தராமல் சமாளித்து வருகி றது. பெரும் போராட்டங்களுக்குப் பிறகே தினக்கூலி ஊழியர்களுக் குச் சம்பளம் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் விரைவில் மூடுவிழாவுக்குக் கொண்டுசெல்லும் என்று கூறப் படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!