லக்னோ: தேர்தலை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் அவர் நேற்று பிரசாரம் செய்தார்.
தம்மைப் பிரதமர் பதவி யிலிருந்து நீக்குவதே எதிர்க் கட்சிகளின் பிரதான இலக்காக இருப்பதாக திரு மோடி தெரி வித்தார்.
அதன்பிறகு வாரிசு அரசியலை நடத்த எதிர்க்கட்சியினர் எண்ணம் கொண்டிருப்பதாக திரு மோடி சாடினார்.
மக்களுக்கு எதிராக இழைக் கப்பட்ட கொடூரங்களை ராஷ்டிரிய லோக் தால் கட்சித் தலைவர் அஜித் சிங் மறந்துவிட்டதாகவும் சுய லாபத்துக்காக அவற்றைப் பற்றி பேசுவதில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
ராஷ்டிரிய லோக் தால் கட்சி உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடனும் பகுஜன் சமாஜ் கட்சியுடனும் கூட்டணி வைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்பி வருவதாக திரு மோடி கூறினார்.
ஆனால் மக்கள் எதிர்க்கட்சியினரை நம்பவில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை துளியளவும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசை திரு மோடி வெகுவாகப் பாராட்டி னார்.
"காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் பயங்கரவாதம் மீதான மென்மை யான அணுகுமுறை பயங்கரவாதி களுக்கு உதவி மட்டும் செய்யவில்லை. மக்களாகிய உங்களின் பாதுகாப்பையும் வலுவிழக்கச் செய்துள்ளன.
"வாக்கு வங்கி அரசியலுக்காக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களைச் சுதந்திரமாக செயல்படவிட்டனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு அமைதி நிலைநாட்டப்பட்டு உள்ளது.
"இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தினால் மோடி நமக்குச் சரியான பாடம் கற்பிப்பார் என்பது பயங்கரவாதிகளுக்குத் தெரியும்.
"எங்கு ஒளிந்தாலும் தப்பிக்க முடியாது என்பது பயங்கரவாதி களுக்குத் தெரியும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளை சாடிய மோடி
6 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Apr 2019 09:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!