பாகிஸ்தான் உருவானதற்கு காங்கிரஸ் காரணம்: மோடி

பயங்கரவாதிகளை அவர்களின் இருப்பிடத்திலேயே கொல்வது புதிய இந்தியாவின் கொள்கை என்று அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கொண்டுள்ள அதே நிலைப்பாடு காங்கிரசுக்கும் இருப்பதாகத் திரு மோடி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்ட உரையின்போது தெரிவித்தார்.

"பாகிஸ்தான் உருவானதற்கு காங்கிரசே காரணம். சுதந்திரத்திற்கு முன்பு அப்போதைய காங்கிரஸ் தலைவர் விவேகத்துடன் நடந்திருந்தால் நாடு பிளவுபட்டிருக்காது. அதே காங்கிரஸ் இப்போது நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளைத் தாழ்த்தும் விதமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்" என்று திரு மோடி சாடினார். பயங்கரவாதத்தை ஒழிக்க பாரதிய ஜனதாக் கட்சி உறுதியாக இருப்பதாக அவர் பிரசார மேடையில் சூளுரைத்தார்.

இதற்கிடையே திரு மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையே யார் மக்களிடையே அதிகமாக பிரபலமாக இருக்கிறார்கள் என்பதையொட்டிய கருத்துக்கணிப்பு ஒன்றில் திரு மோடி முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிஎன்என் நியூஸ் 18 நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில் பாஐகவுக்கு 263 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 139 இடங்களும் கிடைக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!