சென்னை: வாக்களிப்பை ஊக்கு விக்க சென்னை உணவகச் சங்கம் புதிய அறிவிப்பைச் செய் துள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி வாக்களித்ததும் விரலில் வைக் கப்பட்ட மையையும் வாக்காளர் அடையாள அட்டையையும் உண வகங்களில் காட்டினால் அங்கு சாப்பிடும் உணவுக்கான கட் டணத்தில் பத்து விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. புறநகர்களைக் காட்டிலும் சென்னை மாநகரில் வாக்களிக்கச் செல்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் அவர்களை ஊக்குவிக்க இந்த ஏற்பாடு என்று உணவகச் சங்க செயலாளர் ராஜ்குமார் கூறினார்.
வாக்களித்தால் 10% தள்ளுபடி
1 mins read

