கடலூர்: தமிழகத்தில் திமுக தேர்தல் பிரசாரத்திற்கு கேரளா வில் இருந்து வாகனங்கள் அதிக அளவில் வரவழைக்கப் பட்டுள்ளன. பிரசாரம் செய்வதற்கு உகந்த வாகனமான ஜீப் தமிழகத்தில் மிகக் குறைவாக உள்ளதால் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இவை வரவழைக்கப் பட்டு பிரசாரத்திற்குப் பயன் படுத்தப்படுகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணி பிரசாரத்திற்காக இந்த ஜீப்கள் வந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் இந்த வாகனங்கள் மூலம் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தீவிர பிர சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்துப் பகுதி களுக்கும் வேட்பாளரே நேரடியாக பிரசாரத்திற்கு செல்லமுடியாத சூழல் உள்ளதால் வாகனங் களைப் பிரசாரத்திற்குப் பயன் படுத்தி வருகின்றனர்.
கேரள வாகனத்தில் திமுகவினர் பிரசாரம்
1 mins read

