30,000 பேர் இரவு பகலாக நோட்டம்

30,000 பேர் இரவு பகலாக நோட்டம்

1 mins read

இந்தியாவில் பொய்ச் செய்தி பரவலைக் கண்காணித்து தடுக்க 40 குழுக்களை ஃபேஸ்புக் நிறுவி உள்ளது. உண் மைக்குப் புறம்பான, போலியான, வெறுக்கத்தக்க தகவல்கள் அடங்கிய காணொளிகளும் ஒலிப்பதிவுகளும் இக்குழுக் களால் கண்காணிக்கப்படுகின்றன. இக்குழுக்களில் இடம் பெற்றுள்ள 30,000 பேர் இரவு பகலாக இந்தக் கண்காணிப் பில் ஈடுபட்டுள்ளனர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பதிவுகளில் தேர்தல் விதிமுறை மீறல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவை உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்று ஃபேஸ்புக் பொறியியல் மேலாளர் கௌ‌ஷிக் ஐயர் தெரிவித்துள்ளார்..