தேம்பி அழுத அன்புமணி ராமதாஸ்

தேம்பி அழுத அன்புமணி ராமதாஸ்

1 mins read

தர்மபுரி: தர்மபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், புதன்கிழமை இரவு கடகத்தூர் பகுதியில் பிரசாரத் துக்குச் சென்றபோது, அவரின் வாகனத்தைத் தொடர்ந்து பல மாணவர்களும் மற்றவர்களும் ஓடிவந்தனர். அப்போது மக்களிடம் பேச நினைத்த அன்புமணி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், "இவ்வளவு பாசம் வைத்துள்ள மக்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்," என்று அழுதுகொண்டே பேசியது மக்களின் மனதைத் தொட்டதாக செய்திகள் குறிப்பிட்டன.