சென்னை: சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்யப்போவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். உழவர்களின் நலன்களைக் காக்கும் வகையிலான முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டத்தக்கது மாகும் என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார். அந்தச் சாலைத் திட்டம் அறி விக்கப்பட்ட நாளில் இருந்தே அத் திட்டத்தை பாமக கடுமையாக எதிர்த்து வருகிறது என்பதையும் விவசாயிகள் தெரிவித்த கருத்து களின் அடிப்படையில் பாமக தொடுத்த வழக்கில்தான் இந்த வெற்றி கிடைத்தது என்பதையும் அன்புமணி சுட்டினார்.
இபிஎஸ் முடிவு; பாமக வரவேற்பு
1 mins read

