ஹைதராபாத்: நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய அப்போலோ மருத்துவ மனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா காமினினி தமது வாக்கு நீக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளித்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட காணொளி ஒன்றில், அனை வரையும் முட்டாளாக்க சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள் ளார். "இந்திய குடிமகளான எனக்கு இது மோசமான நாளாகும். நான் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன். எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது. எனது வாக்கு முக்கியமில்லையா? இது மிகப் பெரிய குற்றம்," என்று ஷோபனா கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அப்போலோ பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனாவின் வாக்கு நீக்கம்
1 mins read
அப்போலோ மருத்துவ மனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா காமினினி -

