அடிப்படை வசதி இல்லையென புகார்

அடிப்படை வசதி இல்லையென புகார்

1 mins read

புதுடெல்லி: தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என டெல்லி அருகே உள்ள தாத்ரி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர்கள் புகார் எழுப்பி உள்ளனர். நேற்று முன்தினம் அவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் தங்களுக்கு உணவு, படுக்கை, கொசு வலை உள்ளிட்ட எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் தேர்தல் பணிக்காக வந்த சுமார் 80 பேர் வெறும் தரையில் படுத்து உறங்கியதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.