தொடர்கிறது வீடுகளில் சோதனை

தொடர்கிறது வீடுகளில் சோதனை

1 mins read

வேலூர்: சில தினங்களுக்கு முன்புதான் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திலும் கல்லூரிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் இப்போது வேலூர் தொகுதிக்குட்பட்ட மற்றொரு திமுக பிரமுகர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். நேற்று வேலூர் நகருக்குட்பட்ட விரிஞ்சிபுரம், மார்க பந்தீஷ்வரர் நகரிலுள்ள திமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் பாலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல வேலூர், காட்பாடியிலுள்ள கனரா வங்கி மேலாளர் தியாகராஜன் வீட்டிலும் திருச்சி, வையம்பட்டியிலுள்ள கல்பனா என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.