சென்னை: மத்திய சென்னையில் பாமக வெற்றியைத் தடுக்க திமுக பணப்பட்டுவாடா செய்துவருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற ஜெயக்குமார், நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். சிலை கடத்தல்கள் அதிகரித்தது, இலங்கை படுகொலை, காவிரிப் பாசனப்பகுதியில் உள்ள விளைநிலங்களைப் பங்குபோட்டு விற்றது எல்லாம் திமுக ஆட்சியில்தான் நடந்ததாக அவர் குறிப்பிட்டார். பத்து ஆண்டுகால ஆட்சியில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டுவரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஜெயக்குமார்: பாமக வெற்றியைத் தடுக்க திமுக பணம் பட்டுவாடா
1 mins read

