கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அண்ணாமலையை (வலது) ஆதரித்து கடலூரில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பல இடங்களில் தனக்குத் தேர்தல் ஆணையத்தில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றார். தனக்குத் தெரிந்த நடிப்புத் தொழிலில் கண்ணாலேயே பேசி வருவதாகவும் அது மக்களுக்குப் புரிவதாகவும் கமல் தெரிவித்தார்.
கண்ணால் பேசும் கமல்ஹாசன்
1 mins read
-

